பிரதான செய்திகள்

புதிதாக 3 நியமனங்களை வழங்க பாராளுமன்றக் குழு அங்கீகாரம்!

இரண்டு புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் புதிய தூதுவர் ஒருவரை நியமிப்பதற்கு உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ. எஸ். சத்யானந்தவின் நியமனம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் புதிய செயலாளராக எம். எம். நைமுதீனின் நியமனத்திற்கு உயர் பதவிகளுக்கான குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவராக கலாநிதி சானக ஹர்ஷ தல்பஹேவாவை நியமிப்பதற்கு உயர் பதவிகள் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

Related posts

உயர்பீட உறுப்பினர்களை கட்சியில் இருந்து இடைநிறுத்த தீர்மாணித்துள்ளதாக தகவல்கள்

wpengine

அரசாங்கம் வெளிப்படைத்தன்மை இன்றி செயற்படுகின்றது! இப்படி சென்றால், நாட்டை விற்று விடுவார்கள்

wpengine

ஈரான் சந்திப்பில் ஜனாதிபதியுடன் அமைச்சர் றிஷாட், ஹக்கீம் மற்றும் மஸ்தான்

wpengine