பிரதான செய்திகள்

பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நாளை

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று,  ஆரையம்பதி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் மட்டு. மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், ஆரையம்பதி பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.

மண்முனைப்பற்று, ஆரயம்பதி பிரதேச செயலகத்தில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ள மேற்படி நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதேச அபிவிருத்தி இணைத்தலைவர்களுமான அலி சாஹிர் மௌலானா மற்றும் சிறிநேசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதுடன், மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் தெரிவித்தார்.

Related posts

கிளர்ச்சிகள் உருவானால், அவற்றை ஒடுக்குமுறை மூலம் மாத்திரமே அடக்க முடியும் -நாமல்

wpengine

சிறுபான்மை கட்சிகளை ஓரம் கட்டலாம் என்று நினைத்தால் நான் எதிர்ப்பேன்

wpengine

வை.எல்.எஸ். ஹமீட்டின் வெள்ளவத்தை பங்களா! பணம் எங்கிருந்து வந்தது?

wpengine