பிரதான செய்திகள்

பாகிஸ்தான்,சியல்கோட் சம்பவத்துக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கண்டனம்!

பாகிஸ்தான், சியல்கோட்டில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டமைக்கு மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“பாகிஸ்தான், சியல்கோட்டில், இலங்கையரான பிரியந்த குமார தியவதனவை கொடூரமாக எரித்து, படுகொலை செய்தமை சகித்துக்கொள்ள முடியாத, கண்டிக்கத்தக்கதும் வெறுக்கத்தக்கதுமான குற்றமாகும்.

சியல்கோட்டைச் சேர்ந்த ஒரு கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொடூரமான செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

மேலும், குற்றவாளிகளை கைது செய்வதற்கு கௌரவ.பிரதமர் இம்ரான் கான் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளுக்கு, எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.”

Related posts

தமிழ்,முஸ்லிம் உறவுகளை சீர்குலைக்கும் செயற்பாடுகளை யாரும் முன்னேடுக்க வேண்டாம் மன்னாரில் அமைச்சர் றிஷாட்

wpengine

உயர் நீதிமன்றில் சுமார் 17 மனுக்கள் தாக்கல் நாளை விசாரணை

wpengine

மீள்குடியேற்ற செயலணி! பிரதமரினால் நிராகரிக்கபட்ட விக்னேஸ்வரன்.

wpengine