பிரதான செய்திகள்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பட்டதாரிகள் – பொலிஸார் இடையில் மோதல்

வேலையில்லா பட்டதாரிகளின் ஒன்றிணைந்த மத்திய நிலையம் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டது.

வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைகளை விரைவில் தீர்க்குமாறு இவர்கள் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வௌியேற்றுவதற்கு பொலிஸார் முயற்சித்த போது அமைதியின்மை ஏற்பட்டது.

வருடாந்தம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் போது தேசிய திட்டமொன்றை வகுத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகைளை முன்வைத்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதிக்கு சென்றனர்.

இதனையடுத்து, வேலையற்ற இரண்டு பட்டதாரிகளுக்கு ஜனாதிபதி செயலகத்தின் இரண்டு அதிகாரிகளை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

Related posts

போர்வீர சேவைகள் அதிகார சபையினால் மட்டு-அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த போர்வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்கும் விஷேட நிகழ்வு மட்டக்களப்பில்- அனோமா பொன்சேக்கா

wpengine

முஸ்லீகளுக்கு எதிரான ரணிலின் வேஷம் கலையும் நேரம்

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண சூரியப்பெரும பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

Maash