பிரதான செய்திகள்

சுட்டுக்கொலை ,பிரதான குற்றவாளிக்கு மரண தண்டனை..!

கொழும்பு பொரளையில், ஹெட்டியாராச்சிகே துமிந்த என்ற நபரை சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு கொழும்பு, பொரள்ளை, வனாத்தமுல்ல பிரதேசத்தில் உள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றிற்குள் வைத்து ஹெட்டியாராச்சிகே துமிந்த சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

குற்றவாளியான கே.எம் சரத் பண்டார என்று அழைக்கப்படும் எஸ்.எப் சரத் என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் நவரத்ன மாரசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கின் சந்தேக நபர்களான தெமட்டகொடை சமிந்த உள்ளிட்ட மூவரை விடுவித்து விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட சுஹதாக்கள் தினம் இன்று ஹிஸ்புல்லாஹ்

wpengine

மொட்டுக்கட்சி ராஜாங்க அமைச்சர்களுக்கிடையில் துப்பாக்கி மோதல்

wpengine

ஒவ்வோரு ஆண்டும் புற்றுநோயினால் பாதிப்படையும் 900 குழந்தைகள்!

Editor