பிரதான செய்திகள்

சட்ட விரோத மணல் அகழ்வு நடைபெறும் இடத்திற்கு ரவிகரன் விஜயம்

புலிமச்சிநாதிக்குள கிராமத்திற்கு செல்லும் கனகராயன் ஆற்றில் சட்ட விரோத மணல் அகழ்வு மிகவும் பாரியளவில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கருத்துத்தெரிவிக்கையில்,

ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புலிமச்சிநாதி குளம் கிராம மக்கள் தமது பகுதியை அண்டிய கனகராயன் ஆற்றுப் பகுதியில் மணல் அகழ்வு மிக மோசமாக நடைபெறுவதாக தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சட்டவிரோத மண் அகழ்வு இடம் பெற்றுள்ளதை நேரில் சென்று உறுதிப்படுத்தியுள்ளேன்.

குறிப்பிட்ட இடத்தில் மணல் அகழ்வு செய்த ஒருவருக்கு மாதமொன்றிற்கு 1260கியூப் மணல் அகழ்வுக்கு புவிச்சரிதவியல் பணியகத்தினரும் பிரதேச செயலாளரும் அனுமதிகள் வழங்கியிருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

மணல் ஏற்றச்செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட இடங்கள் விவசாயிகளின் வயல் நிலங்களாக இருப்பதையும் தமது வயல் வரம்புகள் மற்றும் வேலிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு கடும் தரைகளாக வயல் நிலங்கள் மாறியிருப்பதையும் விவசாயிகள் சுட்டிக்காட்டினார்கள்

குறித்த மண் அகழ்வு தொடர்பில் வனஇலாகா பிரிவினர் கையூட்டுக்களைப் பெற்றுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரிய மணல் கொள்ளை

wpengine

மந்தகதியில் நடைபெறும் மன்னார் நகர அபிவிருத்தி பணிகள்! கவனம் செலுத்துமா மாவட்ட செயலகம்

wpengine

வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு வடமாகாண சபை எதும் செய்யவில்லை -TNA அன்ரன் ஜெயநாதன் ஆதங்கம்

wpengine