செய்திகள்பிரதான செய்திகள்

சட்டவிரோதமாக கழுதைகளை கடத்திய இருவரை நுரைச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக 6  கழுதைகளை ஏற்றிச் சென்ற இரண்டு லொறிகளை கைப்பற்றி  சாரதிகளை நுரைச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நுரைச்சோலை பொலிஸார் நேற்று புதன்கிழமை (26) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் நரக்கல்லி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நுரைச்சோலை பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் கண்டகுளிய பகுதியில் வசிப்பவர்களாவர்.

இவர்கள் கழுதைகளை கல்பிட்டி கந்தகுளியிலிருந்து படல்கம பகுதிக்கு ஏற்றிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Related posts

பிரதமர் பதவியை எவரும் குழிதோண்டிப் பறிக்க முயலமாட்டார்கள்.

wpengine

இரண்டு வருடங்கள் செல்லாமல் எப்படியும் அரசாங்கத்தை கலைக்க முடியாது என்றார்-நாமல்

wpengine

லன்சா மீது கை வைக்க மாட்டார்கள்! அவருக்கு எல்லாம் தெரியும் மைத்திரியின் அதிரடி முடிவு

wpengine