பிரதான செய்திகள்

கொலை, போதைப் பொருள் கடத்தல் முஸ்லிம் இர்பான் கைது

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான காஞ்சிபான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கஞ்சிபான இம்ரானை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அண்மையில் மாகந்துர மதுஷூடன் கஞ்சிபான இம்ரானும் கைது செய்யப்பட்டிருந்தார்.

இம்ரானுடன் நாடு கடத்தப்பட்ட மேலும் மூன்று பேரையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கஞ்சிபான இம்ரான் கொலைகள், போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts

கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பில் இந்தியாவிடம் உதவி கோரும் மனோ!

Editor

ராஜபஷ்சவிடம் கோரிக்கை விடுத்த மன்னார் தவிசாளர்

wpengine

முசலி பிரதேச பல நோக்கு கூட்டுறவு சங்கங்களை மீண்டும் இயங்க வட மாகாண சபை உறுப்பினர் நியாஸ் நடவடிக்கை

wpengine