பிரதான செய்திகள்

கண்ணில் மண்ணை தூவிவிட்டு தேவையானதை அரசு செய்கின்றது.

பௌத்த பிக்குமாருக்கு எதிராக எத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அதனால் தேரர்கள் மேலும் வலிமையடைவதாக தாயகத்தை காக்கும் தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

நாராஹேன்பிட்டியவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முறுத்தெட்டுவாவே ஆனந்த தேரர் இதனை தெரிவித்தார்.

அரசாங்கம் நினைப்பது ஒன்றாகவும் சொல்வது ஒன்றாகவும் செய்வது வேறொன்றாகவும் உள்ளது.

மக்களின் கண்களின் மண்ணை தூவிவிட்டு அரசாங்கம் தனக்கு தேவையானதை செய்துவருகின்றது.

அரசாங்கம் மேற்கொள்ளும் இத்தகைய செயற்பாடுகளை கவனிக்காதுவிட்டால் நாடும் இனமும் பௌத்த சாசமும் அழியும் நிலை ஏற்படும் என முறுத்தெட்டுவாவே ஆனந்த தேரர் குறிப்பிட்டார்.

Related posts

2023 A/L பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Editor

ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

wpengine

உள்ளூராட்சி மன்றங்களில் விரைவாக நடத்தவும்! மகிந்த தேசப்பிரியவிற்கு கடிதம்

wpengine