உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஆப்கானிஸ் தான் நாட்டின் உயர் விருது “காஸி அமானுல்லா கான்“ மோடிக்கு

ஆப்கானிஸ் தான் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று ஆப்கானிஸ்தானின் மிக உயர்ந்த காஸி அமானுல்லா கான் விருது வழங்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரில் இந்தியா – ஆப்கானிஸ்தான் நட்புறவின் அடையாளமாக 1400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியா கட்டித்தந்துள்ள சல்மா அணைக்கட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

இந்தியா-ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையில் நிலவும் நட்புறவின் அடையாளமாக 20 கிலோமீட்டர் நீளம், 3 கிலோ மீட்டர் அகலத்தில் தற்போது தரமுயர்த்தி கட்டிமுடிக்கப்பட்டுள்ள இந்த அணைக்கட்டின் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சுமார் 80 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாசன வசதியை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.201606041532533453_PM--Narendra-Modi-honoured-with-Ghazi-Amanullah-Khan-medal_SECVPF

இந்த விழா மேடையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் மிகவும் உயரியதாக கருதப்படும் காஸி அமானுல்லா கான் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.

Related posts

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கிளிநொச்சியில் பேரணி!

Editor

மன்னாரில் வெள்ளைப்பிரம்பு தினம்

wpengine

உழைக்கும் மக்களின் பணத்திற்கான பிரதிபலன் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்-அநுர குமார திசாநாயக்க

wpengine