பிரதான செய்திகள்

ஆபாச காணொளிகளை காட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சித்த நபரொருவர் கைது

மன்னார்  வங்காலைபாடு பிரதேசத்தில் 5 ஆம் தர மாணவிக்கு ஆபாச காணொளிகளை காட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள்
தெரிவித்துள்ளார். குறித்த சிறுமி மேலதிக வகுப்பொன்றுக்கு சென்றுள்ளதுடன்,
அன்று அந்த வகுப்பு இடம்பெறவில்லை.

இதன் போது அருகில் இருந்த நபரொருவர் இந்த சிறுமியை அழைத்து சென்று ஆபாச
காணொளிகளை காட்டி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.
எனினும் குறித்த சிறுமி அங்கிருந்து தப்பித்து சென்று சம்பவத்தினை பெற்றோரிடம் கூறியுள்ளார்.
பின்னர் பேசாலை காவற்துறையினர் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

Related posts

உளவியல் ரீதியாக பல்கலைக்கழக மாணவர்கள் பாதிப்பு – பாராளுமன்றில் இம்தியாஸ் பாக்கீர் எடுத்துரைப்பு!

Editor

வங்கியில் குறைந்த பட்சம் 1500 ரூபாய் இருப்பு இருக்க வேண்டும். பலர் சிக்கலில்

wpengine

முறைகேடுகள், ஓரவஞ்சகத்தை உடன் நிறுத்த வேண்டும்! பௌத்ததேரர் அரசை எச்சரித்தார்.

wpengine