பிரதான செய்திகள்

அட்டாளைச்சேனை மக்களின் காணியினை பெற்றுக்கொடுத்த ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

அம்பாறை – அட்டாளைச்சேனை, அஸ்ரப் நகர் கிராம சேவகர் பிரிவின் பல்லகாடு கிராமத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட இருந்தது.
இந்த நிலையில் குறித்த செயற்பாட்டை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இடை நிறுத்தியுள்ளார்.

எதிர்வரும் இரு வாரங்களில் குறித்த பகுதிக்கு தாம் விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடிய பின்னரே இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என மாகாண காணி ஆணையாளருக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பணிப்புரை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த காணியானது அப்பிரதேசத்தைச் சேர்ந்த 69 குடும்பங்களின் பூர்வீக காணி எனவும், அதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருகிறது எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடல் மாசாக்கம், எண்ணைய் கசிவு திட்டம் தொடர்பாக கருத்தரங்கில் அரசாங்க அதிபர் ஸ்டான்லி டீமெல் பங்கேற்பு

wpengine

அரசியலில் மஹிந்த ஒய்வு!மீண்டும் அரசியலுக்கு வரும் பசில்

wpengine

மன்னாருக்கு வடக்காகவுள்ள இலங்கை கடற்பகுதியில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது.!

Maash