Breaking
Sat. Apr 27th, 2024

மன்னார் முள்ளிக்குளம் கடற்படை தளத்தில் விசேட பயிற்சியை பூர்த்தி செய்த கடற்படையினருக்கு இலட்சினை அணிவிக்கும் நிகழ்வு முள்ளிக்குளம் கடற்படை தளத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு இலட்சினையை அணிவித்தார்.

இதன்போது கடற்படையினருக்கான விசேட ஒத்திகை நிகழ்வினையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து முள்ளிக்குளம் கடற்படைத்தளத்தில் விசேட ஒத்திகை நிகழ்வு இடம் பெற்றது.

ஐஸ்.ஐஸ் தீவிரவாத அமைப்பானது கடற்கரை பகுதியில் சிலரை பிடித்து பணயக்கைதிகளாக வைத்து சித்திரவதை செய்கின்றது.

இந்நிலையில் கடற்படை, விமானப்படை என்பன இராணுவத்தின் உதவியுடன் குறித்த ஐஸ்.ஐஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்து தாக்குதல்களை மேற்கொண்டு பிடித்து வைக்கப்பட்டவர்களை காப்பாற்றும் நிகழ்வாக காணப்பட்டது.

மேலும் ஐஸ்.ஐஸ் தீவிரவாத அமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் சண்டையில் உயிரிழந்துள்ளமை மற்றும் குறித்த பகுதியை படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளமை போன்ற ஒத்திகை நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ரூவான் விஜயவர்த்தன ஆகியோர் குறித்த ஒத்திகை நிகழ்வை பார்வையிட்டனர்.

இதன் போது கடற்படை தளபதி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் படைவீரர்களின் நலன்கள் மற்றும் சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அத்துடன் நின்றுவிடாமல் அவர்களது நலன்களுக்காக செய்யக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முள்ளிக்குளத்தில் அமைந்துள்ள கடற்படையின் வயம்ப தலைமையகத்தில் நடைபெற்ற மரைன் படைப்பிரிவின் பயிற்சி நிறைவு மற்றும் சின்னம் சூட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் எமது படையினருக்கான கௌரவத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்ததாக உலகின் முக்கிய நாடுகளில் இலங்கை பாதுகாப்பு படையினரின் இழந்து போயிருந்த பயிற்சி வாய்ப்புக்களை மீண்டும் பெற்றுக்கொடுக்க முடிந்திருக்கின்றது.

எதிர்காலத்தில் அவை அதிகரிக்கப்படுமென்றும் இலங்கை கடற்படையினருக்கு உயர் தொழில்நுட்ப அறிவு மற்றும் பயிற்சிகளை வழங்குவதற்கு ஐக்கிய அமெரிக்க கடற்படை விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த போர்க் காலத்தில் இலங்கை கடற்படை தாய் நாட்டுக்காக ஆற்றிய பணியை தற்போதைய நவீன தொழில் நுட்பத்துடன் இணைத்து தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்புக்காக இப்போது ஆற்றும் பணிகளை ஜனாதிபதி பாராட்டினார்.

கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவினது தலைமையில் இலங்கை கடற்படை வரலாற்றில் முதற்தடவையாக மரைன் படைப்பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

 

இன்று தொடக்கம் உலகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட மரைன் படைப்பிரிவுகளில் இளைய படைப்பிரிவாக இது இணைகிறது.

இந்த மரைன் படைப்பிரிவு சிறப்பு திறனைக் கொண்டுள்ளது. கடற்கரை ஊடான எந்தவொரு தாக்குதலுக்கும் முகங்கொடுப்பதற்கும், கடலிலிருந்து தரைக்கு சென்று எதிரி இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் சிறந்த பயிற்சி பெற்றுள்ளது.காட்டுப்போர் மற்றும் நதிநிலைகளை சார்ந்த நடவடிக்கைகளிலும் திறமை பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான பங்களிப்பை வழங்குதல், இலங்கையிலும், பிராந்தியத்திலும் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களின்போது உதவுதல் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் இந்த படைப் பிரிவு விசேட பயிற்சி பெற்றுள்ளனர்.

 

165 அலுவலர்கள் மற்றும் சிப்பாய்களை கொண்ட முதலாவது மரைன் படைப்பிரிவு பயிற்சி முடிந்து வெளியேறும் நிகழ்வு இன்று பிரதம தளபதி ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

மேலும், முள்ளிக்குளம் கடற்கரையில் இலங்கை கடற்படையின் மரைன் படைப்பிரிவினர் எதிரி இலக்குகள் மீது மேற்கொள்ளும் பயிற்சிகளைக் காட்டும் கண்காட்சியையும் ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார்.

இதேவேளை, படைப்பிரிவின் இணையத்தளத்தையும் திறந்து வைத்துள்ளார். கடற்படை தளபதி நினைவுப் பரிசொன்றையும் ஜனாதிபதிக்கு வழங்கி வைத்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *