பிரதான செய்திகள்

ஹக்கீம் உண்மையினை வெளிப்படுத்த வேண்டும் இல்லையென்றால் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் துரோகி

(அ அஹமட் )

அண்மையில் அமைச்சர் ஹக்கீம் கண்டியில்இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோது  முஸ்லிம்கள் மீது இப்போதுஇடம்பெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல் எங்கிருந்து வருகின்றன என்று எமக்குதெரியும் என்று கூறியிருந்ததோடு அவைவெளியில் சொல்ல முடியாத அளவுபாரதூரமானவை எனவும் கூறியிருந்தார்.

அமைச்சர் ஹக்கீம் இதனை மிகச்சாதாரணமாக கூறியிருந்தாலும் இதுசாதாரண விடயமல்ல.அதற்கு முன்பு இலங்கையில் இடம்பெற்ற இனவாதசெயற்பாடுகளின் பின்னால் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை குற்றம்சாட்டிக்கொண்டிருந்த அமைச்சர் ஹக்கீம்இவ்வாறு கூறியிருப்பதானது அதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஸ இல்லை என்பதைதெளிவாக நிரூபணம் செய்கிறது.

இதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஸ இருந்தால் அதனை முதலில் வெளிப்படுத்துபவராக அமைச்சர்ஹக்கீமே இருந்திருப்பார்.

பெரும்பான்மையின முக்கிய  அமைச்சர்கள் உட்பட பல முக்கிய அரசியல் வாதிகள் ஞானசார தேரரின் பின்னால் யார் உள்ளார் என்பதில் தர்க்கித்து கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம் சமூகம் இவைகள் தொடர்பில் எந்தவிதமான முடிவும் எடுக்க முடியாமல்நிர்க்கதியான ஒரு நிலையில் உள்ளது. 

இவ்வாறான நிலையில் அமைச்சர் ஹக்கீம்அதனை அறிந்தும் மறைப்பது ஏன் என்ற விடயமே அவர் மீதான சந்தேகத்தை கிளறிவிடுகிறது. இது அவர் முஸ்லிம் சமூகத்துக்கு செய்கின்ற மிகப் பெரும் துரோகமும் கூட. அந்த உண்மைகளை வெளிப்படுத்துவதில் என்ன பாரதூரமான விளைவு ஏற்படப்போகிறதோ தெரியவில்லை. அதனைஅமைச்சர் ஹக்கீம் சற்று தெளிவு செய்தால்சிறப்பாக இருக்கும்.

அமைச்சர் ஹக்கீம் இந்த விடயங்களைமறைப்பதானால் அது அரசியல்இல்லாபங்களுக்கல்லாமல் வேறுஎதற்குமாகவும்  இருக்க முடியாது. இன்றையநிலையில் அமைச்சர் ஹக்கீமின் அரசியல்இலாபங்களைஇவ்வாட்சியாலர்களிடமிருந்தே அதிகம்பெற்றுக்கொள்ள முடியும்.அவரின் தமிழ்தேசியக் கூட்டமைப்புடனான உறவு என்றவிடயத்தையும் இவ்விடத்தில் கவனத்தில்கொள்வது பொருத்தமானதாக இருக்கும் எனநம்புகிறேன். அமைச்சர் ஹக்கீமின் இக்கூற்றானது பொது பல சேனாவின் பின்னால் முன்னாள் ஜனாதிபதி இல்லை என்றவிடயத்தை நிறுவிச்செல்வதோடு இவ்வாட்சியாளர்கள் மீதான சந்தேகத்தைமேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

நோர்வே உடன் நெருக்கமான உறவுகளை பேணிவரும் இந்திய புலனாய்வு பிரிவிடன் தேர்தல் செலவுகு பணம் பெற்றவர் என குற்றம் சுமததப்படும் ஹக்கீம் பொதுபலசேனா மற்றும் முஸ்லிம் விரோத தாக்குதல்  ரகசியங்களை உடனடியாக வெளியிடவேண்டும்.

Related posts

சுமார் 200 இடங்களில் தேடியும் கிடைக்காத செவ்வந்தி, இந்தியாவுக்கு தப்பி சென்றிருக்கலாம்..!

Maash

ஆயுர்வேத திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – உயர்நீதிமன்றம்!

Editor

மன்னார் சித்திவிநாயகர் பாடசாலையின் புதிய தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழா

wpengine