பிரதான செய்திகள்

ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளை உலகளாவிய பாடசாலைகளில் தடை செய்ய பரிந்துரை – UNESCO

அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு, யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (UNESCO) செயல்பட்டு வருகிறது. 

இந்த அமைப்பு கற்றலை மேம்படுத்தவும் இணையம் மூலமான கொடுமைப்படுத்துதலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், உலகெங்கிலும் உள்ள பாடசாலைகளில் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளை தடை செய்ய பரிந்துரைத்துள்ளது.

பாடசாலைகளில் ஸ்மார்ட கைத்தொலைபேசிகளை அதிகப்படியான பயன்பாடு கல்வி செயல்திறன் குறைவதற்கும், வகுப்பறையில் மோசமான செயல்திறனுக்கு வழிவகுக்கிறது.

தொழில்நுட்பத்தின் பயன்பாடு மேம்பட்ட கற்றல் அனுபவத்திற்காகவும் , மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நல்வாழ்வுக்காகவும் இருக்க வேண்டும், அவர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது எனவும் UNESCO தெரிவித்துள்ளது.

Related posts

காதலனை கரம்பிடிக்க அரச குடும்ப அந்தஸ்தை இழக்க இருக்கும் ஜப்பான் இளவரசி

wpengine

மஹிந்த அணி கொழும்பில் மந்திர ஆலோசனை! சம்பந்தனுக்கு வரப்போகும் ஆப்பு

wpengine

மாணவர்களுக்கு 80% வரவு கருத்திற்கொள்ளப்பட மாட்டாது

wpengine