பிரதான செய்திகள்

ஷாபியிடம் விசாரணைமேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரியிடம் வாக்குமூலம்

சிங்கள பௌத்த பெண்களுக்கு கருத்தடை சத்திரசிகிச்சைககளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வைத்திய கலாநிதி ஷாபி ஷியாப்தீன் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.


பொலிஸ் அதிகாரி பி.எஸ். திசேரா என்பவரிடமே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதன்போது வைத்திய கலாநிதி ஷாபி ஷியாப்தீன் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலைவட்டு வாக்குமூலத்தை பெற்ற பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


கைது செய்யப்படும் போது வைத்தியர் குறித்த நிலைவட்டில் உள்ள தரவுகளை அழித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.


எனவே இந்த அழிக்கப்பட்ட நிலைவட்டு தொடர்பிலேயே தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சமூக ஊடகம்! அரேபிய வசந்தமும்,டிசம்பர் மழையும் வினுப்பிரியா தற்கொலையும்!

wpengine

தயா கமகேயின் இனவாதத்தை வேடிக்கை பார்க்கும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள்

wpengine

வடக்கு மாகாணத்தின் கிராம வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்திசெய்ய 5000 மில்லியன் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

Maash