அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததன் பின்னரே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்.

வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னரே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

அம்பாறை பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம், 14 நாட்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு ஒதுக்கப்படும். 

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவடைந்த பின்னர் 17 ஆம் நாள் நண்பகல் 12 மணிவரை மூன்றரை நாட்கள் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்காக ஒதுக்கப்படும். 

இந்தநிலையில், வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததன் பின்னரே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

நாமல், மற்றும் முந்தைய சபாநாயகர் உட்பட 20க்கு மேற்பட்ட முக்கிய புள்ளிகளின் சொத்துக்கள் பறிமுதல் ????

Maash

மன்னார் மனித புதை குழி 21 சிறுவர்களுடைய மனித எலும்புக்கூடுகள்

wpengine

70 கோடி சம்பாதித்த சிறுவன்

wpengine