பிரதான செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம்

வெள்ளம் மற்றும் மண்­ச­ரி­வு­க­ளினால் வெகு­வாகப் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களை உயர் பாது­காப்பு வல­ய­மாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ளார்.

நாட்டில் ஏற்­பட்­டி­ருந்த வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு அனர்த்தம் தொடர்பில் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த விசேட அனர்த்த முகா­மைத்­துவச் செய­ல­ணி­யுடன் நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற விசேட கலந்­து­ரை­யா­டலின் பின்­னரே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இந்த கலந்­து­ரை­யா­டலின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

வெள்ள நீர் வடிந்­தோ­டி­யதன் பின்னர் குறிப்­பிட்ட பிர­தே­சங்­களில் அதி­க­ளவில் நோய் பர­வு­வ­தற்கு வாய்ப்­புகள் உள்­ளன. அத்­துடன் மண்­ச­ரிவு ஏற்­பட்ட பிர­சே­தங்­க­ளிலும் அதி­க­ளவில் பாதிப்­புகள் உள்­ளன. இதன் அடிப்­ப­டை­யி­லேயே குறித்த பிர­தே­சங்­களை உயர் பாது­காப்பு வல­ய­மாக பிரகடனப்படுத்துகிறேன்.

இது இவ்வாறிருக்க இந்த கலந்துரையாடலின் போது மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொர்பில் ஆராயப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் முப்படையினர் அனர்த்த முகாமைத்து அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

பஸ் கட்டணங்களில் மாற்றங்களும் இல்லை!

Editor

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி

wpengine

இறக்காமத்தில் இரத்த தான முகாம்

wpengine