செய்திகள்பிரதான செய்திகள்

வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்கள் ஜனவரியில், நாட்டுக்கு அனுப்பிய தொகை 573 மில்லியன் அமெரிக்க டொலர் .!

கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் இலங்கைக்கு 573 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 17.5 வீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

இந்தத் தொகை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 613.8 மில்லியன் டொலர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளை அல்லது நாளை மறுதினம் இந்த பதவி ஏற்பு நிகழ்வு நடைபெறலாம்

wpengine

சவுதி அரேபியாவில் நாய்க்கான கடை! அல் கோபரில் திறக்கப்பட்டுள்ளது.

wpengine

கெக்கிராவை- கனேவல்பொல நசீராவின் விட்டில் விசித்திரமான கோழி

wpengine