பிரதான செய்திகள்

வெல்லம்பிட்டி,கொடிகாவத்தைக்கு மஸ்தான் (எம்.பி) விஜயம் – சொந்த செலவில் மக்களுக்கு உதவி

(ஊடகபிரிவு)
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல குடும்பங்கள் தமது உறவுகள் மற்றும் உடமைகளை இழந்து  தவிக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் அவர்களை ஆறுதல் படுத்தும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வெல்லம்பிட்டி,கொடிகாவத்த பிரதேச பாடசாலையில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்டார்.

இன்று குறித்த பகுதிக்கு விஜயம் செய்த அவர், இயற்கையின் சீற்றத்தினால் நிர்க்கதியான நிலையில், இடம்பெயர்ந்து வெல்லம்பிட்டி, கொடிகாவத்த பாடசாலையில் தங்கியிருந்த மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்ததுடன், அவர்களுக்கு தமது சொந்த செலவில் கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான உலர் உணவுப்பொதிகள் மற்றும் அவசர முதலுதவிக்குத்தேவையான மருந்துப்பொருட்களையும் வழங்கிவைத்தார்.ee1b283c-80ff-4711-a1c4-6db093cfc42a
எதிர்பாராத விதமாக மனித நேயத்துடன் தமக்கான உதவிகளை செய்த மஸ்தான் எம்பிக்கு அம்மக்கள்  நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இதேவேளை வெள்ளம், மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் தன்னாலான உதவிகளை அவர் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.d54ef09b-4f61-4ff4-9f13-fab1263514d4

Related posts

மக்களுக்கு அரசியல் ரீதியாக YLS ஹமீட் செய்த ஒரு நல்ல காரியத்தை கூற முடியுமா?

wpengine

ஜனாஸா விவகாரத்தில் சலவை செய்யப்படும் சமயோசிதம்!

wpengine

இம்போட்மிரர் செய்தி ஆசிரியரைத் தாக்கியவர் மன்னிப்புக்கோரி கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.

wpengine