பிரதான செய்திகள்

வீதிப் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு மன்னாரில் விழிப்புணர்வு

வீதிப் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு மன்னாரில் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று நடைபெற்றுள்ளது.


மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.ஜெசிந்தன் தலைமையில் இந்த நடைபவனி ஆரம்பமாகியுள்ளது.

மன்னார் மாவட்ட செயலக அதிகாரிகள் பணியாளர்கள் உட்பட திணைக்கள பணியாளர்களும் குறித்த விழிப்புணர்வு நடை பவனியில் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 7ஆம் திகதி ஆரம்பமான வடக்கு மாகாண வீதி பாதுகாப்பு வாரமானது எதிர்வரும் 13ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கள்வர்களைப் பிடிக்க காரிருளில் சென்ற கல்முனை மேயர் ரக்கீப்!

wpengine

சமுர்த்தி பயனாளி இரண்டாம் கட்ட கொடுப்பனவு ஏப்ரல் 10க்கு முன்

wpengine

நுண்நிதி கடனுக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

Editor