செய்திகள்

விறகு சேகரிக்க சென்றவர் மீது மரக்கிளை விழுந்ததில் 3 பிள்ளைகளின் தந்தை பலி.

நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மஸ்கெலியா, புரவுன்சீக் தோட்ட மோட்டீங்ஹேம் பிரிவில் விறகு சேகரிக்க சென்றவர் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் இன்று சனிக்கிழமை (19 ) வீசிய காற்றின் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியாவில் தொழில் சந்தை.

Maash

10 இலட்சம் ரூபா சன்மானம் , போலீசாரின் அறிவித்தல் .

Maash

இரனைமடுகுளம் நான்கு அல்லது ஐந்து தடவகளுக்கு மேல் வான்பாய்ந்துள்ளது .

Maash