பிரதான செய்திகள்

வியாழந்திரன்,பிள்ளையான் குழுக்களுக்கிடையில் மோதல்

மட்டக்களப்பு – சந்திவெளி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் ஆதரவாளர்களுக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இச்சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏனையவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த செவ்வாய்கிழமை சந்திவெளியில் பிரதேசசபையில் போட்டியிட்ட பிள்ளையான் குழுவை சேர்ந்த ஒருவரை வியாழேந்திரன் குழு வாள்களால் வெட்டியிட்டியுள்ளனர்.


இவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே நேற்றைய தினம் பிள்ளையான் குழு, வியாழேந்திரன் குழு மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழக மாநில துணைத் தலைவரை சந்தித்த ஹக்கீம்

wpengine

ஆளும்கட்சி பா. ம உறுப்பினர்களின் சம்பளம் முழுமையான காசோலையில் மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி காரியாலயத்துக்கு.

Maash

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் நியமனம்

wpengine