பிரதான செய்திகள்

விக்ரமசிங்க ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் – நாமல் ராஜபக்ஷ

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இந்த நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் ஊடகத்தையும் எதிர்க்கட்சியையும் மிகவும் அச்சுறுத்துகின்றது என்று அவர் கூறியுள்ளார்.

நாட்டை அபிவிருத்தி செய்யும் எந்தவொரு வேலைத் திட்டங்களும் தற்போதைய அரசாங்கத்திடம் இல்லை என்றும் அவர் கூறுகின்றார்.

தற்போதைய அரசாங்கம், கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை உலகிற்கு காட்டிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

அத்துடன் எந்த எதிர்ப்பு வந்தாலும் நடை பவணியை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதாக அவர் மேலும் கூறினார்.

மாத்தறை பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

Related posts

இந்த ஆண்டில் இறைவரி திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு!

Editor

இன்டர்நெட் இல்லாமல் Whatsapp பயன்படுத்தலாமா?

wpengine

யார் இந்த ரவுப் ஹக்கீம்? சாய்ந்தமருது முகம்மத் இக்பால் சொல்லுகின்றார்.

wpengine