பிரதான செய்திகள்

விக்னேஸ்வரனுக்கு எதிராக 22பேர் கையொப்பம்! விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மாற்றுவதற்கான கோரிக்கைக் கடிதம், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் நேற்று இரவு கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைக்கு வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியின் 16 உறுப்பினர்களும் எதிர்கட்சியின் 6 உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

வடக்கு ஆளுநர் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.

இதேவேளை வெகுவிரைவில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக மாகாண சபையில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

முஸ்லிம் ஜனாஷாவை அடக்கம் செய்வதை கைவிடவேண்டும்.

wpengine

திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக றிஷாட்

wpengine

IIFAS அமைப்பின் மார்க்க கருத்தரங்கும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.

wpengine