பிரதான செய்திகள்

வாழைச்சேனையில் பதற்றம்! பின்னனி யோகேஸ்வரனின் நிதி

வாழைச்சேனையில் இரு இனங்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் வாக்குவாதத்தால் பெரும் பதற்றம் நிலவிவருவதாக அங்கிருந்து அறியமுடிகின்றது.

பஸ்தரிப்பிடம் ஒன்றை கட்டுவதற்கு வாழைச்சேனை பெற்றோல் நிலையத்திற்கு அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிலையில், வாழைச்சேனையில் சகோதர இனத்தவர்கள் அந்த அத்திவாரத்தை மூடிவிட்டு, அதன் மேல் அவர்களது முச்சக்கர வண்டிகளை நிறுத்தி “இங்கே பஸ்தரிப்பிடம் கட்ட அனுமதிக்க மாட்டோம்” என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் கலகமடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

மன்னார்- முசலி பிரதேசத்தில் அதிகமான மாடுகள் களவு போகின்றது! உரிமையாளர்கள் விசனம்

wpengine

நடுக்கடலில் சிக்கிய 700 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ்​ போதைப்பொருள்.

Maash

இரண்டாம் எலிச​பெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில்

wpengine