பிரதான செய்திகள்

வாகன இறக்குமதி ஆறு மாதத்திற்கு தடை! 2வருடம் நீடிப்பு

வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு ஆறு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது இரண்டு ஆண்டுகள் வரையில் நீடிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரிஞ்சிகே இதனை தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், சந்தையில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாகவும், இதனால் அதிக விலைக்கு வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.


அரசாங்கத்தின் நிதி இருப்புக்களில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எனினும், வாகனங்களை அதிக விலைக்கு வாங்க வேண்டாமெனவும் சம்பத் மெரிஞ்சிகே வலியுறுத்தியுள்ளார்.


எவ்வாறாயினும், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையின் காரணமாக 40 வீதமான கார் விநியோகஸ்தர்கள் திவாலாகிவிட்டனர்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Maash

நாவலடி இராணுவ முகாமை அகற்றக்கோரி முஸ்லிம்கள் போராட்டம்

wpengine

போராட்டத்திற்கு சென்ற சுமந்திரன் மற்றும் சாணக்கியன் எம்.பி – கொந்தளித்த மக்கள் . !

Maash