பிரதான செய்திகள்

வவுனியாவில் புதுவருட வியாபாரம் பாதிப்பு

புதுவருடத்தை முன்னிட்டு வவுனியாவில் தாம் மேற்கொண்டு வரும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அங்காடி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வியாபாரிகள் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நகரசபைக்கு சொந்தமான இடத்தில் வியாபாரம் செய்து வந்தோம்.
பின்பு துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு நிலையம் அமைப்பதற்காக அந்த இடத்தில் இருந்து நாம் வெளியேற்றப்பட்டோம்.

இந்த நிலையில் நகரசபைக்கு முன்பாக நாம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் வீதி ஓரங்களில் புதிதாக வியாபாரம் செய்வதற்கு வேறு நபர்களுக்கு வவுனியா நகரசபை அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் புதுவருட தினத்தை முன்னிட்டு நாம் மேற்கொண்டு வரும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நகரசபை வாக்குறுதி வழங்கியது போல் மிக விரைவாக பழைய இடத்தை செப்பனிட்டு மீண்டும் எமக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ராஜபக்ஷவின் முன்னிலையில் பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினர் சத்தியப்பிரமாணம்.

wpengine

ACMC அம்பாறை மாவட்டத்தின் ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தியது .

Maash

ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகத்தின் சொத்துக்களை சேதப்படுத்திய நபருக்கு 19 வரை விளக்கமறியலில்.

Maash