பிரதான செய்திகள்

வவுனியாவில் தூக்கில் தொங்கிய குடும்பத்தர்.

வவுனியா, கள்ளிக்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


மனைவி மற்றும் பிள்ளைகள் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள தமது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் தனிமையாக இருந்த குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


குறித்த நபர் சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதை உறவினர்களே அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.


இதனையடுத்து சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.


பெரியசாமி மோகனதாஸ் (வயது 38) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

பாடசாலை மாணவர்களை ஏற்றாத பேருந்துகள் மீது நடவடிக்கை.! 1958 இலக்கத்தை அழைக்கவும் .

Maash

அச்சுவேலி நெசவுசாலையை கைப்பற்றி அடாவடித்தனம் செய்பவர்களை வெளியேற்றுமாறு கோரி போராட்டம்!

Editor

எச்சரிக்கை : பொதுமக்களிடம் முக்கிய கோரிக்கை.!

wpengine