பிரதான செய்திகள்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் மதுபோதை

வவுனியா – நெளுக்குளம் பொலிஸாரால் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தாதிய உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.ஸ் அத்தனாயக்க தலைமையிலான குழுவினர், மாட்டுச்சந்திக்கு அருகே நேற்றிரவு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய 28, 30 மற்றும் 31 வயதுடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களை நாளைய தினம் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

Related posts

ரஷ்யா மீதான பொருளாதார தடை! டொனால்ட் டிரம்ப் ஒப்புதல்

wpengine

ரணிலுக்கு எதிரானவர்களை மொட்டுகட்சியில் இருந்து நீக்க ரணில் நடவடிக்கை! பதவிகள் வழங்க நடவடிக்கை

wpengine

பணிப்பகிஸ்கரிப்பு முடிவு! இணைந்த நேர அட்டவணை விரைவில் அமுல்படுத்தப்படும் – அமைச்சர் பா.டெனிஸ்வரன்

wpengine