பிரதான செய்திகள்

வவுணதீவு பிரதேச செயலக வருடாந்த கலாச்சார விழா

மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச செயலகமும், மண்முனை மேற்கு கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடத்திய வருடாந்த கலைஞர்கள் கலாச்சார விழா வவுணதீவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

 

இந்த நிகழ்வில் மண்முனை மேற்கைச் சேர்ந்த, பாரம்பரிய வைத்தியத் துறைகளிலும் கலைத்துறைகளிலும் பாண்டித்தியம் பெற்ற 8 கலைஞர்கள் பொன்னாடை அணிவித்து சான்றிதழ்களும், நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, பாடசாலை மாணவர்களின் கலை கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் தமிழ் மொழி வாழ்த்து, வரவேற்பு நடனம் போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளது.

Related posts

மண்ணெண்ணெய் கொள்வனவுக்கான உயிரை விட்ட மொஹமட் இலியாஸ்

wpengine

இலங்கை மத்திய வங்கியில் காணாமல் போன 50 இலட்சம் ரூபா!

Editor

“கொழும்பு கோட்டை” இலங்கையில் படுகொலை செய்யப்படும் தமிழ்.

wpengine