பிரதான செய்திகள்

வவுணதீவு பிரதேச செயலக வருடாந்த கலாச்சார விழா

மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச செயலகமும், மண்முனை மேற்கு கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடத்திய வருடாந்த கலைஞர்கள் கலாச்சார விழா வவுணதீவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

 

இந்த நிகழ்வில் மண்முனை மேற்கைச் சேர்ந்த, பாரம்பரிய வைத்தியத் துறைகளிலும் கலைத்துறைகளிலும் பாண்டித்தியம் பெற்ற 8 கலைஞர்கள் பொன்னாடை அணிவித்து சான்றிதழ்களும், நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, பாடசாலை மாணவர்களின் கலை கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் தமிழ் மொழி வாழ்த்து, வரவேற்பு நடனம் போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளது.

Related posts

தில்லையடி முஹாஜிரீன் அரபுக் கல்லூரியின் வெள்ளி விழா, றிசாட் எம் . பி . மற்றும் மலேசிய தூதுவர் சிறப்பு விருந்தினராக வருகை.!

Maash

செப்டெம்பர் மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தல்! 95% பணி நிறைவு

wpengine

ஹக்கீமின் தீர்மானத்திற்கு எதிராக ஹாரிஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் ஆகியோர் பங்கேற்கவில்லை

wpengine