பிரதான செய்திகள்

வருட இறுதிக்குள் மாகாண சபை தேர்தலை நடாத்த அரசு தீர்மானித்துள்ளது.

ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை இந்த வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவாலும், எதிர்க்கட்சிகளாலும் விடுக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் மற்றும் நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்திகள் காரணமாக வருட இறுதிக்குள் 6 மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசு ஆலோசித்துள்ளது.

சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாண சபைகளுக்கான ஆயுட்காலம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்திருந்தது.

இதேவேளை, வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

குறித்த 6 மாகாணங்களுக்குமான தேர்தலை பழைய விகிதாசார முறையில் நடத்த அரசு தீர்மானித்துள்ளது.

அது தொடர்பில் அரசின் பங்காளிக் கட்சிகளுடனும், நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சித் தலைவர்களுடனும் விரைவில் பேச்சுகளை நடத்த அரசு தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது.

Related posts

நிரபராதிகளை அவசரமாக விடுதலை செய்ய வேண்டுமென்று கோரிக்கை முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine

கல்முனை ஜாமியா மன்பயில் ஹிதாயா அரபுகல்லூரியின் பட்டமளிப்பு விழா

wpengine

தேசிய மக்கள் சக்தி வாக்குறுதியளித்து நிறைவேற்றாத ஒன்றை காட்ட முடியுமா ? பிரதி அமைச்சர் எரங்க குணசேகர.

Maash