பிரதான செய்திகள்

வடக்கு,கிழக்கு நோக்கி பயணமாக உள்ள பஷில்!

வடக்கு, கிழக்கில் தமது கட்­சியின் அர­சியல் செயற்­பா­டு­களை ஆரம்­பிப்­ப­தற்­காக பொது எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தர்கள் அடுத்த வாரம் அப்­ப­கு­தி­க­ளுக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். பொது எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷில் ராஜபக் ஷ தலை­மை­யி­லான குழு­வி­னரே இவ்­வாறு விஜயம் செய்து கட்­சியின் செயற்­பா­டு­களை வடக்கு கிழக்கில் வியா­பிப்­பது குறித்து ஆரா­ய­வுள்­ளனர்.

 

எதிர்­வரும் 21, 22, 23 ஆம் திக­தி­களில் பஷில் ராஜபக் ஷ தலை­மையில் இவர்கள் யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். முன்னாள் வட­மா­காண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்­தி­ர­சிறி மற்றும் முக்­கி­யஸ்­தர்­களே இவ்­வாறு அங்கு செல்­ல­வுள்­ளனர்.

யாழ்ப்­பாணம் உட்­பட வடக்கில் தமது கட்­சிக்கு புதிய அமைப்­பா­ளர்­களை நிய­மிப்­பது குறித்தும் தமது கட்­சிக்­கான ஆத­ர­வினை திரட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை இந்த குழு­வினர் மேற்­கொள்­ள­வுள்­ளனர். மூன்று தினங்கள் அங்கு தங்­கி­யி­ருந்து மக்­க­ளையும் இவர்கள் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளனர்.

எதிர்­வரும் ஜன­வரி மாதம் நாடு தழு­விய ரீதியில் உள்­ளூ­ராட்சி தேர்தல் நடை­பெறும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இத­னை­விட மாகாண சபைத் தேர்­தல்­களும் அடுத்த வருடம் இடம்­பெறும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்த நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவைத் திரட்டும் முகமாகவே பொது எதிரணியைச் சேர்ந்த குழுவினர் அப்பகுதிக்கு  விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

விசாரணைக்கு ஆஜராகவில்லை! முஷாரப்பின் சொத்துக்கள் பறிமுதல்.

wpengine

பஸில் ராஜபக்ச சபைக்கு வருவது இல்லை! நிதி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.

wpengine

பயங்கரவாத கால அச்சுறுத்தலுக்கு மத்தியில் விற்கப்பட்ட, கைவிடப்பட்ட சொந்தக் காணிகளை மீளப்பெறுவதற்கான அறிவித்தல்.

wpengine