பிரதான செய்திகள்

வட மாகாண சபை உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு! பயிற்சி வழங்கி பிரயோசனமில்லை

வடக்கு மாகாணசபையின் நிர்வாக ரீதியிலான செயற்பாடுகளை அதிகாரிகள் முறையாக முன்னெடுக்கப்படுவதில்லையென பெயர் குறிப்பிட விரும்பாத மாகாண சபை உறுப்பினர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மாகாணசபையின் நிர்வாக ரீதியான செயற்பாடுகளுக்கென அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சிகளை பெற்றுக்கொள்கின்றபோதும், நிர்வாக ரீதியான செயற்பாடுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லையென குறிப்பிட்டார்.

அத்துடன், நிர்வாக பயிற்சி முகாம்கள் வெளிநாடுகளிலோ உள்நாடுகிலோ நடத்தப்பட்டாலும், அந்த நிர்வாக பயிற்சி முகாம்களில் அதனுடன் தொடர்புபடாதவர்கள் பயிற்சிகள் பெற்றுக்கொள்வது போன்ற செயற்பாடுகள் இடம்பெறுவதாக மாகாணசபை உறுப்பினர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஆசிய நிதியத்தினால் மாகாண சபை உறுப்பினர்களுக்காக இந்தியாவில் ஏற்பாடு செய்துள்ள பயிற்சி முகாமிலும் இவ்வாறான நிலையே ஏற்பட்டுள்ளதாகவும் மாகாணசபை உறுப்பினர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் மாகாணசபை உறுப்பினரான எம்.கே சிவாஜிலிங்கம் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

Related posts

மக்களின் வாழ்க்கை வழமைக்கு திரும்பிய பின்னர் தேர்தலை நடத்த முடியும்.

wpengine

ஊருக்கொரு ஆட்சி, உள்ளுக்குள் எரிகிறது கட்சிகளின் மனச்சாட்சி..!

wpengine

27ஆம் திகதிவரை விடுமுறைக் காலப் பகுதி அல்ல

wpengine