பிரதான செய்திகள்

றிசாட் – விக்கி கருத்து முரண்பாடு! முதலமைச்சரின் கருத்து உண்மைக்கு மாறானது.

வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியாவில் ஸ்தாபிப்பது தொடர்பில் வட மாகாண முதலமைச்சருக்கும், மத்திய அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.


இதன் ஒரு கட்டமாக நேற்று யாழ்ப்பாணம் கோண்டாவில் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது முதலமைச்சர் விக்னேஷ்வரன் சில தகவல்களை வெளியிட்டார்.

கடந்த திங்கட்கிழமை மத்திய அமைச்சரவையின் கூட்டத்திற்கு சென்றிருந்த போது, அமைச்சர் பீ. ஹரிசன் வவுனியாவிற்கான பொருளாதார மையத்தை மதவாச்சிக்கு கொண்டு செல்வதற்கான
அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தமை தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.

வடமாகாண முதலமைச்சரின் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என எமது செய்திச் சேவையுடன் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பொருளாதார மையம்
மதவாச்சிக்கு கொண்டு செல்லப்படுவதை தாம் அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்தார

Related posts

மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

wpengine

நல்லாட்சி அரசு என்பது வெறும் வாய்ப்பேச்சில் மாத்திரமே! வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine

வீட்டுக்கு வீடு மரம் நடுகை திட்டம் வவுனியா செட்டிகுளத்தில் ஆரம்பம்

wpengine