பிரதான செய்திகள்

ரோஹித அபேகுணவர்தனவை பார்வையீட்ட மஹிந்த

கூட்டு எதிர்க் கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்து கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

 

மத்திய வங்கி ஆளுநரை பதவி நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு முன்பாக நேற்றுமுற்பகல் கூட்டு எதிர்க் கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் ஊர்வலமும் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த எதிர்ப்பு ஊர்வலத்தின் போது பொலிஸார் பாதுகாப்பு வேலிகளை கடந்து செல்ல முற்பட்ட போது,  பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன மற்றும் ஸ்ரீயானி விஜேவிக்ரம ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்தவை காப்பாற்றும் ரணில் இரகசியஒப்பந்தம்

wpengine

வரவு செலவு திட்டத்தில் மீனவர்கள் கண்டு கொள்ளப்படவில்லை-என்.எம்.ஆலம்

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு நான் எழுதும் திறந்த மடல்

wpengine