உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ரோஹிங்யா முஸ்லிம்களின் அடக்கு முறைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் பிரதமர்

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஆங் சாங் சூகியிடம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடந்து வருகின்றன, இதனால் 3.1 லட்சம் பேர் அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மியான்மர் நாட்டின் தலைவராகவும், அரசின் ஆலோசகராகவும் உள்ள ஆங் சாங் சூகியை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதுடன், தனது கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Related posts

அமைச்சர் றிசாட் பதியுதீன் மல்வானை விஜயம் (வீடியோ)

wpengine

கல்முனை இரவுடன் சாய்ந்தமருதாக மாற்றம்

wpengine

ஐ.தே.க. யார் ஜனாதிபதி வேட்பாளர்

wpengine