அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தை காலி செய்யுமாறு கடிதம் அனுப்ப வேண்டிய அவசியமில்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தை காலி செய்யுமாறு கடிதம் அனுப்ப வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

“நாங்கள் கடிதம் அனுப்ப வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை மக்கள் அவரை வீட்டை காலி செய்யக் கேட்டு கடிதங்களை அனுப்பலாம்,” என்று அமைச்சர் கூறினார்.

அரசாங்கம் தனது நிலைப்பாட்டை முன்னாள் ஜனாதிபதிக்கு எழுத்துப்பூர்வமாக ஏன் முறையாகத் தெரிவிக்கவில்லை என்பது குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக கேட்டுக் கொண்டால், மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீடு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பைக் குறிப்பிட்டு, ஒரு வழக்கறிஞராக ராஜபக்ச நிலைமையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார். “அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்ச கடிதம் இல்லாமல் தனது வீட்டை காலி செய்ய முடிந்தால், அவர் ஏன் அப்படி ஒரு கடிதத்திற்காகக் காத்திருப்பார்?” என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது துணைவியார் இருவருக்கும் பொருத்தமான மாற்று வீட்டை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் நாளிந்த ஜெயதிஸ்ஸ மேலும் கூறினார்

Related posts

ரமழான் நோன்பு உணவு தொடர்பான சர்ச்சை! தீ வைத்த அகதிகள் (விடியோ)

wpengine

சான் அல்விஷ் – மாணவனின் விபத்தினையை ஏன்? ரோயல் கல்லுாாி மூடி மறைத்தது?

wpengine

அடிப்படை உரிமைகளில் ஆழ ஊடுருவும் PTA

wpengine