அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ராஜபக்ஷ படை குறைப்பு அடிப்படை உரிமை மனு விசாரணை மார்ச் 19 ஆம் திகதி.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரைக் குறைக்கும் தீர்மானத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை மார்ச் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

இந்த மனு இன்று (06) ,ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாகக் குறைப்பதற்கு அண்மையில் அரசாங்கம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கரையோர மாவட்ட பிரச்சினை அமைச்சர் றிஷாட் அன்று சொன்னதை இன்று ஹரீஸ் தெரிவிக்கின்றார்.

wpengine

சேவையை விட்டு வெளியேறிய 2000 வைத்தியர்கள், நாட்டையே விட்டு வெளியேற இருக்கும் 5000 வைத்தியர்கள் .

Maash

பேஸ்பு 200நிறுவனம் தற்காலிகமாக தடை

wpengine