பிரதான செய்திகள்

ரணில்,சஜித் தலைமையில் இன்று சிறிகொத்தாவில் கூட்டம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு இன்றும் (01) நடைபெறவுள்ளது.


கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் தலைமையில் சிறிகொத்தாவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக பாராராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள சின்னம் குறித்து இன்றைய கலந்துரையாடலில் இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளளார்.


இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தேசிய ஒற்றுமை கூட்டணி (ஜாதிக்க சமகி சந்தானய) தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைப்பதாக அந்த கூட்டணியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்றில் பெண் ஊழியர்களுக்கு தொல்லை – நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் உறுப்பினர்கள் சங்கத்தின் தலைவி கோரிக்கை!

Editor

இடமாற்றம் கிடைக்கவில்லை தற்கொலை செய்த அபிவிருத்தி உத்தியோகத்தர்.

wpengine

வவுனியா,வேப்பங்குளம் சமூர்த்தி வங்கியின் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட பயனாளிகள்

wpengine