பிரதான செய்திகள்

ரணிலுக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை 51 பேர் கையொப்பம் .

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட உள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை யோசனையில் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த 51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனையில் கையெழுத்திடுவதாக அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் காமினி லொக்குகே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ்,
“ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கிய பின்னர், அடுத்த பிரதமரை நியமிப்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பு எனக் கூறியுள்ளார்.

பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை வென்றவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல! வடக்கின் இறுதிச்சாட்சியம் ரிஷாத்

wpengine

அரசு வெகுவிரைவில் கவிழும் என்பதேயே நாட்டில் இடம்பெறும் அரசியல் சம்பவங்கள் மூலம் உணர முடிகின்றது.

wpengine

நம்பிக்கை இல்லாப்பிரேரணை! ஹக்கீம்,றிஷாட் நம்மோடு உள்ளார்கள் ரணில் தெரிவிப்பு

wpengine