பிரதான செய்திகள்

ரணிலின் புதிய தீர்மானம்! பிரதேச சபைகளை நகர சபையுடன் இணைப்பு

தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபைகளை, மாநகர சபை அல்லது நகர சபையுடன் இணைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளார்.

2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கோடிட்டுக் காட்டிய ஜனாதிபதி, மிகவும் வினைத்திறனான பொதுச் சேவையை வழங்குவதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் தற்போது 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 276 பிரதேச சபைகள் அடங்கிய 341 உள்ளூராட்சி அதிகார சபைகள் இயங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில உள்ளுராட்சி அதிகார சபைகள் தேவையான வருமான ஆதாரங்களைக் கொண்டிருக்கின்ற போதிலும், போதிய வருமான ஆதாரங்கள் இல்லாத சில உள்ளூராட்சி அதிகார சபைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபைகளை மாநகர சபை அல்லது அவற்றுடன் அண்மித்துள்ள நகர சபையுடன் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

Related posts

விவசாயிகளுக்கு சந்தோஷசமான செய்தி! நிவாரண அட்டை

wpengine

“ஈஸ்டர் தாக்குதலுடன் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எந்தவொரு தொடர்பையும் நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை – (IPU) அறிவிப்பு!

wpengine

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளை ஏற்று, புனரமைக்க பார்வையீட்ட மாகாண உறுப்பினர்

wpengine