பிரதான செய்திகள்

ரணிலின் திட்டத்தை ரத்துசெய்த மைத்திரி! பிரயோசனமில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார முகாமைத்துவ குழுவினை ரத்து செய்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பொருளாதார முகாமைத்துவ குழு முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி கடுமையாக தெரிவித்துள்ளார்.

இந்தக்குழுவினை ரத்து செய்யுமாறு இதற்கு முன்னதாகவும் ஜனாதிபதி கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரக் குழுவினால் எவ்வித நன்மையும் கிடைக்கப் பெறவில்லை என அமைச்சரவைக் கூட்டத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

Related posts

இந்த அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளன.

wpengine

மன்னார், சிலாவத்துறை பொலிஸ் பிரிவில் ஒருவர் கைது

wpengine

வவுனியா அரச நிறுவனத்தில் தமிழ் மொழிக்கு பாதிப்பு

wpengine