பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் நாளை பாடசாலை விடுமுறை

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (நவம்பர் 10) புதன்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்களும் வெள்ள இடரினால் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் முன்வைத்த பரிந்துரைக்கமைய மாகாண ஆளுநரின் அனுமதியுடன் நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னால் அமைச்சருக்கு செப்டெம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியல்

wpengine

காட்டுமிராண்டி தனமான முறையில் அடித்கொலை செய்யப்பட்ட மன்னார் கழுதை! இதற்கு நடவடிக்கை வேண்டும்

wpengine

கத்துக்குட்டி அஸ்மின்யின் கருத்து வடக்கு முஸ்லிம்களை வேதனையடையச் செய்கின்றது -மௌலவி பி.ஏ.சுபியான்

wpengine