பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழில் கல்சியத் தண்ணீரை அருந்திய முதியவர் ஒருவர் சனிக்கிழமை (15) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில், கல்சியத் தண்ணீரை அருந்திய முதியவர் ஒருவர் சனிக்கிழமை (15) உயிரிழந்துள்ளார். கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ராசன் மைக்கல் (வயது 85) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 14 ஆம் திகதி தவறுதலாக கல்சியம் கலந்த தண்ணீரை அருந்தியுள்ளார். இந்நிலையில் சிகிச்சை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (15) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Related posts

மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்

wpengine

மன்னார் மாவட்டத்தில் 1108 குடும்பங்கள் பாதிப்பு! அனர்த்த நிலையம்

wpengine

வவுனியா சாளம்பகுளம் பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த டெனீஸ்வரன்

wpengine