செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழில் 2642.29 ஏக்கர் தனியார் காணிகள் முப்படை, மற்றும் பொலிசாரிடம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 575 ஏக்கர் தனியார் காணிகள் , இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளதாக , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை(31) மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார தலைமையில் நடைபெற்ற போது , மீள் குடியேற்றம் மற்றும் காணி விடுவிப்பு தொடர்பிலான விடயம் கலந்துரையாடப்பட்ட போதே அவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 1775.27 ஏக்கர் காணி இராணுவத்தினரிடமும் , 160.67 ஏக்கர் காணி , கடற்படையினரிடமும் , 660.05 ஏக்கர் காணி விமான படையினரிடமும் , 28.28 ஏக்கர் காணி பொலிஸ் திணைக்களத்திடமும் காணப்படுகின்றன.

அதன்படி யாழ் . மாவட்டத்தில் 2ஆயிரத்து 642.29 ஏக்கர் தனியார் காணிகள் முப்படையினர் மற்றும் பொலிசாரின் வசம் உள்ளன என தெரிவிக்கப்பட்டது

Related posts

ராஜபக்ஷ அரசு சிங்கள பௌத்த மக்களின் ஆதரவை அரசு இழக்கநேரிடும்.

wpengine

மூடப்பட்டுள்ள யால சரணாலயம் இரவில் அமைச்சர் புதையல் வேட்டையின் ஆரம்பமா?

wpengine

அஸ்கிரிய மகாநாயக்கர் பதவிக்கும் கடும் போட்டி! இரண்டு துணை மகாநாயக்கர்கள் களத்தில் குதிப்பு!

wpengine