பிரதான செய்திகள்

மூத்த ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் காலமானார்!

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் இன்று அதிகாலை காலமானார். பி.மாணிக்கவாசகம் என அறியப்படும் இவர் பல ஊடகங்களுக்கு செய்தியாளாராக பணிபுரிந்துள்ளார்.

பல் பரிமாணங்களை கொண்ட இவர் கட்டுரைகள், நூல்கள் என்பவற்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். யுத்த காலத்தின் தமிழ் மண்ணின் அவலங்களை உலகறியச் செய்த ஊடகவியலாளர்களில் இவர் முக்கியமானவராக திகழ்கிறார்.

யாழ் ஊடக அமையம் 2019ம் ஆண்டு மயில்வாகனம் நிமலராஜன் ஞாபகர்த்தமான நெருக்கடியான சூழலில் அறிக்கையிடல் பணிக்கான விருதை இவருக்கு வழங்கி கௌரவித்திருந்தது.

மேலும் இவர் பல்வேறு விருதுகளை பல்வேறு அமைப்புக்களில் இருந்து பெற்றுக்கொண்டமை விசேட அம்சமாகும்.

Related posts

கொழும்பை பிறப்பிடமாகக்கொண்டவர்கள், கொழும்பில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வாடகை வீடுகளில்.

Maash

Islamic Relief based London INGO help 1,100 families in Kolannawa, Welampitiya

wpengine

நாளை விசேட அமைச்சரவைக் கூட்டம் – கடன் மறுசீரமைப்பு தொடர்பிலும் ஆராய்வு!

Editor