பிரதான செய்திகள்

முஸ்லிம்கள் மீது பலி சுமத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மூதூர் பிரதேசத்தில் மூன்று சிறுமிகள் பாலியல் சேட்டைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் வீணாக முஸ்லிம்கள் மீது பலி சுமத்தப்படுவதற்கு எதிராக இன்று மூதூர் பிரதேசத்தில் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

மூதுர் ஜும்மா பள்ளிவாசல் முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி மூதூர் பிரதேச செயலகம் வரை சென்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்திரளான வாலிபர்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் கடந்த (05) திங்கட்கிழமை மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஐ..எம். ரிஸ்வான் முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் பாதிக்கப்பட்ட சிறுமிகளால் சந்தேகநபர்களை அடையாளம் காட்டமுடியவில்லை.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மூதூர் பிரதேச செயலாளரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Related posts

கூகுள் கோட் இன் – 2019 இந்துக் கல்லூரி மாணவன் முதலாமிடம்

wpengine

ஹக்கீம், றிஷாட் புறந்தள்ளி எமது சமூகத்தின் எதிர்காலம் பற்றி சிந்திப்போம்!

wpengine

மிஸ்டர் கிளீன் என அழைக்கப்பட்ட ரணில் மிஸ்டர் டேர்ட்டியாகி விட்டார்-மஹிந்தானந்த அலுத்கமகே

wpengine