பிரதான செய்திகள்

முள்ளிக்குளத்தில் 100 ஏக்கர் காணியை விடுவிக்க இணக்கம்

முள்ளிக்குளம் பிரதேசத்தில் 100 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேரட்ன இப் பிரதேசத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது, அப் பகுதி மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

முள்ளிக்குளம் பிரதேசத்தில் இதுவரையில் பதிவினை உறுதி செய்துள்ள சுமார் 185 குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகின்றனர்.

ஐனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை முறையாக மீளக்குடியமர்த்தத் தேவையான நடவடிக்கைகளை கடற்படை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

Related posts

Sinhala famous artist – singer Hema Sri De Alwis no house – Minister Sajth Pramadasa helping to construct a house

wpengine

தவிசாளர் நௌஷாட்டுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை; – மக்கள் காங்கிரஸினால் மூவரடங்கிய குழு நியமனம்!

wpengine

தாஜூடினின் கொலை! அனுர சேனநாயக்கவின் பிணை நிராகரிப்பு

wpengine