பிரதான செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் தெரிவின் மீளாய்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைகோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் சமுர்த்தி நிவாரண கொடுப்பனவு இதுவரை மீள்குடியேற்றப்பட்ட 23 கிராமங்களுக்கு கிடைக்காத நிலையில், அதனை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் சமுர்த்தி திணைக்களம் ஈடுபட்டுள்ளது.
அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகளை தெரிவின் மீளாய்வு நடவடிக்கைகள் அண்மையில் இடம்பெற்றுள்ளன.

இதன்போது சமுர்த்தி கிடைக்காத புதிய பயனாளிகள் பலர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 11024 குடும்பங்களுக்கே சமுர்த்திக் கொடுப்பனவு கிடைத்து வருகின்றது.

இந்நிலையில் 14713 குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் சமுர்த்தி திணைக்களம் ஈடுபட்டுள்ளது.

இதற்கான புள்ளிவிவரங்களையும் கோரிக்கைகளையும் சமுர்த்தி திணைக்களத்திடம் கோரியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Related posts

பேஸ்புக்,வட்அப்,வைபர் சட்டவிரோத முறையில் பயன்படுத்துவர் தகவல் வெளியாகியுள்ளது.

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதல்! சக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில்

wpengine